Tuesday 21 July 2020

எல்லை தாண்டு

வேசியாகவோ தாசியாகவோ பார்ப்பது வேதனை
அது ஆண்டாளாகட்டும்
மகதலா மரியாவாகட்டும்.
கடவுளைக் காதலிப்பது எவ்வளவு அபத்தம்
திருஅவையும் பெரியாழ்வாரும் ஒன்றுதான்.
“என்னை அன்பு செய்கிறாயா?” 
என்று கேட்டபோது பேதுரு பதறினார்.
“என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே”
ஆண்டவரே பதறிப்போனார்.
எல்லை தாண்டிய தீவிரவாதம் அது.
சாதி தாண்டி காதலித்தாலே
சங்கருக்கும் சனியன்கள் நாம்.
சங்கர் ‘பாவம்’, பெரும்பாவம்.
வந்தேறி வைதீகத்தின் வரையறையில்
‘யாவரும் கேளிர்’ மரபு மறைந்து போனது
தமிழர் தன்மானம் தளர்ந்து போனது.

அதிகாலையில் அப்போஸ்தலர்களுக்கு முன்பே
ஆண்டவரைத் தேடியாதாலோ என்னவோ
விண்ணகப் பயணம் நாற்பது நாள் தள்ளிப்போனது.
திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற
மரியாவின் காதல் கவிதைகள்
எப்படித் தொலைந்தனவோ தெரியவில்லை.
ஆண்டாள் அந்த வகையில் பேறுபெற்றவள்.
அரசு சின்னமாகிப்போனாள்.
மரியா சின்னாபின்னமாகிக் கிடக்கிறாள்.
கடவுளையே காதலித்தவளின் பேரன்பு
கற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
ஆண்டவருக்கான தாசியாக
இருப்பதன் கர்வம் அவளுக்கு இருக்கட்டுமே.

நல்ல பங்கைத் தேர்ந்துகொண்ட 
மகதலா மரயா 
அன்பினால் ஆண்டவரையே ஆண்டாள்.


No comments:

Post a Comment