Wednesday 4 December 2013

மாங்கல்யம் தந்துனானேனா



மழிக்கப்பட்ட மண்டை
முடியப்பட்ட ஒரு கொத்து மயிறு
பூணூல் காட்டும் மார்பு
உருண்டு திரண்டு தொங்கும் தொந்தி
எண்ணெய் வடியும் தோல்
கொழுப்பேறிப் பிதுங்கும் சதை
புரியாத மொழியில் பூசை நடத்தும்
புரோகிதன் கொடுத்தால் மட்டும் 
தாலி கட்டும் ஏழை மாப்பிள்ளை.

உன் இரத்தத்தையும் உழைப்பையும்
வாழ்க்கையின் வாய்ப்புகள் அனைத்தையும்
உறிஞ்சிக் குடித்த ஓநாயின் கரங்களிலிலா
உன் இல்லறம்?

சமர்ப்பயாமி என்றால் 'உன்னிடம் உள்ளதைக் கொடு'
ஸ்வாகா என்றால் 'பெற்றுக்கொண்டவன் விழுங்கி விடு'
பிடுங்குவதற்குத்தான் குண்டம் அமைக்கிறான்.

தெரிந்துகொள்.
திருமணச் சடங்கில்
நீ ஒரு பார்வையாளன்தான்.
ஒருபோதும் பங்கெடுப்பாளன் அல்ல.
தெளிவாகவே இருக்கிறான் அவன் 
மூடனாக நீ இருப்பதால்.
சுரண்டுபவனுக்கும் 
சுரண்டப்படுவனுக்குமிடையே உள்ள உறவு அது