Friday 8 August 2014

மனிதன்



விபத்துகள்
கடத்தல்
கற்பழிப்பு
காதல் கொலைகள்
கலவரங்கள்
இன்னும் பல்வேறு நிகழ்வுகள்
வெறும் செய்திகளாய் மட்டும் 
கடந்து விடுமோ?

உன் வீடு எரிந்தால்?
உன் தங்கை இறந்தால்?

நமக்கு நடந்தால் மட்டும்தான் 
தெரியவேண்டும் என்பதில்லை.
இதயம் கொஞ்சம் நனைந்தாலே
நாம் மனிதர்கள்தான்.

Thursday 7 August 2014

இரவுக்கடன்



முன்புபோல் இல்லை
உலகம் மாறிவிட்டது. 
மாற்றமில்லாமல் கிடக்கின்றன
நமது வீடுகளும் எண்ணங்களும்.
காடுகளும் கழனிகளும் 
காலி மனைக் கட்டங்களாக
மாறிப்போன காரணத்தாலே
கடன் முடிக்கும் காலம்
காலை இரவாய்ப்போனது.
சாலைகளையும், இருப்புப் பாதைகளையும்
இன்னும் எத்தனை நாள்
நம்பியிருப்போம்?
பலாத்கார பூமியில்
பாதகர்கள் அங்கும் காத்திருக்கிறார்கள்.
பாவம் இவள்
மரியாதைக்காக இல்லாவிட்டாலும்
நின்றுகொண்டிருக்கிறாள்.
அறையிருந்தும் சிலர் அங்கே
ஐந்து அறிவு ஜீவிகளாய்.

இருப்பிடத்தில் கழிப்பிடம்
எப்போது இடம் பெரும்?
குற்றவுணர்வு இல்லாமலேயே
குடும்பம் நடத்துகிறோம். சீச்சீ...