Thursday 21 June 2018

வளரட்டும் சமூகவிரோதிகள்

பத்தாயிரம் கோடியில் பசுமை சாலை
எப்படியும் வந்தே தீரும் என்கிறார் முதல்வர்.
பல்லாயிரம் வளங்கள் அழித்துவிட்டு
பசுமை சாலை யாருக்காம்?
நெடுஞ்சாலை மரங்களை அகற்றிய அரசின்
சமூக அக்கறையை கள்ளிச் செடிகள்கூட மன்னிக்காது.
வளர்ச்சி என வாய்கிழிய கத்தும் காவடிதூக்கிகள் 
காரை ஏற்றுமதி செய்துவிட்டு 
சோறை எங்கு உற்பத்தி செய்வார்களாம்?
ஏரிகள் நான்கை செம்மைப்படுத்தி
ஏராளமான மரங்கள் நட்டு காடு வளர்க்கும்
எம் தோழர் பியூஸ் மனு~; சமூகவிரோதி.
சமூகசீர்கேட்டை சினிமாவில் பணமாக்கும்
புரட்சித்தளபதிகள் மத்தியில் 
உண்மையிலேயே போராடும் மன்சூர் அலிகான் சமூகவிரோதி
வெள்ளை வேட்டிகளாலும், பூட்ஸ் கால்களாலும் மிதிபடும்
ஏழை விவசாயிகளுக்கு ஒத்தையில் நின்று போராடும் 
நிஜ வேங்கை மகள் வளர்மதி ஒரு சமூக விரோதி.
என்னடா உங்க சட்டம்? 
என்னடா உங்க திட்டம்?