ரிமோட்டைத் தட்டியவுடன் தடுமாறினேன்
டிவியில் அழகான அரவாணி காம்பியரிங் செய்துகொண்டிருந்தாள்.
முதலில் வந்தவர் சரவனன் என்ற வித்யா
ஒரு எழுத்தாளர்
தான் அரவாணியான கதை சொல்லியபோது
தாரைதாரையாக கண்ணீர் - இருவர் கண்ணிலும்
M.A வரை படித்தது தமிழ்ப்பல்கலைக்கழகம்
அதிகம் படித்தும்
அரவாணி என்பதாலேயே பிச்சை கேட்க நேரிடும் சூழல்
ஒருமுறை அவருடைய கல்லூரி ஆசிரியரே
பிச்சையிட்ட கொடுமை.
அடக்கடவுளே!
எத்தனைமுறை நாம் அவர்களைப் பார்த்தவுடன் இளித்திருப்போம் ஏளனத்தோடு.
யோசித்துப்பார்

அரவணைக்க ஆட்கள் இல்லை
அண்ட வீடு இல்லை
அடுத்தவர் ஆசையோடு பேசுவதுமில்லை.
வேலைசெய்யத் தயாராயிருந்தும்
கூப்பிட நீயுமில்லை, நிறுவனங்களுமில்லை
அவர்களும் மனிதர்களே.
நாம் ஏங்கும் அன்பு, காதல், பாசம்
அவர்களுக்கும் உண்டுதானே.
அரவாணியானது குறைபாடு அல்ல
அது இயற்கை
நாளை உன் குழந்தையும் அரவாணியாகலாம். ஏற்றுக்கொள்வாயா?
No comments:
Post a Comment