அவன் செய்த குற்றம்
இந்த தேசத்தில் நல்லவனாக இருந்தான்.
வாக்குச்சாவடியில்கூட அடிப்படை வசதிகள் இல்லை
ஆனாலும் அரன்மனையில் வாழும் அரசியல்வாதிகள்
ஓட்டுக்கு நோட்டு கொடுத்தால் போதும்
எதைப் பற்றியும் கவலைப்படாத தேசம்.
தற்குறிக்கூட்டம் ஜனநாயகத்தில் எதையும் செய்ய முடியும்.
செய்திருக்கிறார்கள், செய்யவிருக்கிறார்கள்.
திரைப்போராளிகளுக்குத் தூபம் காட்டத்தான்
திராவிடக்கல்வி வடிக்கப்பட்டது போல.
களப்போராளிகள் கழுவேற்றப்படுகின்றனர்.
காமராசர், நல்லகன்னு என வரிசை நீள்கிறது.
செவப்பா இருந்தாலே போதும் எனும் அருவருப்பான அம்மாக்களில்
இவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று எண்ணியதால்
நல்லகன்னு…
ஜெயன்

No comments:
Post a Comment