மரத்தடியில் இரவெல்லாம் கட்டுண்டு பனியில் கருகிய இரு மலர்கள் காலையில் கசக்கிப் பிழியப்படும் சோகம். சாதி மாறி காதலிச்சது குத்தமாம் 25,000 பைன் போடுவாராம் கட்ட பணம் இல்லைனுதனால பொண்ண அனுபவிக்கலாம்னு தீர்ப்பு சொல்லுவாராம் நாட்டாமை. மங்கல்யான் முன்னெடுத்துச் செல்வதை - சில மிருகங்கள் பின்னோக்கித் தள்ளுகின்றன. மூடர்கூடமாய் இன்னும் இந்தியா. அசாத்திய கர்வத்தோடு கருவிகளும் கூனிக் குறுகி நிற்கும் மனிதர்களும். வளர்ச்சிக்காக ஏங்குகிறது தனிமனித ஒழுக்கமும் கலாச்சாரக் கூறுகளும். அசுர வளர்ச்சியில் வக்கிர புத்தி.
பிதுங்கிக்கொண்டிருந்த பேருந்தில் விரும்பி ஏறிக்கொண்டேன். மிச்சமாய்க் கிடைத்த ஏமாற்றத்தை கையில் மடித்துக்கொண்டு டிக்கெட் வாங்காமலே நின்றிருந்தேன். பத்து ரூபாய் சேமித்துவிட்ட சந்தோசம் சட்டென்று மறைந்தது. பரிசோதகன் எப்படித்தான் கண்டுபிடித்தானோ என்னை விடவே இல்லை. இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொள்ள நூறு தண்டமாய்ப் போனது. தம்பி படிச்சவன்தானே...ஏம்ப்பா இப்படி? வழக்கமான அல்லக்கைகளின் வார்த்தைகளை விழுங்க முடியாது விக்கி நின்றது மனம். பரிசோதகனின் திறமையைப் பாராட்டினேன். கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும மெத்தப் படித்த நம் அரசியல் வியாபாரிகளும் கண்முன்னே நின்றனர்.